இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்... 5 முறை கருக்கலைப்பு... எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு!

 

இளம்பெண்ணை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து வந்ததாக எம்.எல்.ஏ. மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரயில்வே கோடூர் தொகுதியின் ஜனசேனா எம்எல்ஏ ஆரவஸ்ரீதர் மீது ஒரு இளம்பெண் பாலியல் தொந்தரவு மற்றும் கருக்கலைப்பு முயற்சிகள் தொடர்பான புகார் அளித்துள்ளார். அவர் கடந்த ஒன்றரை ஆண்டாக பலாத்காரம் செய்தார் மற்றும் கருவுற்ற பெண்மணியை மிரட்டி 5 முறை கருக்கலைப்பு செய்ய முயன்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்ற பிறகு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் திருப்பதி எஸ்பிக்கு உடனடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனடிப்படையில், ரயில்வே கோடூர் காவல் நிலையத்தில் ஆரவஸ்ரீதர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் விமர்சனத்தைத் தூண்டியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!