திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ₹3.72 கோடி வசூல்!
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிப்ரவரி 4 ஒரு நாளில் மட்டும் பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலமாக ₹3 கோடியே 72 லட்சம் வசூலாகியுள்ளது. மொத்தம் 69,389 பக்தர்கள் ஏழுமலையானைச் தரிசனம் செய்துள்ளனர். சுமார் 20,247 பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாகத் தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்த வாரத்தின் பிற நாட்களில் காணிக்கை நிலவரம் பிப்ரவரி 4: ₹3.71 கோடி (68,586 பக்தர்கள்) பிப்ரவரி 3: ₹3.72 கோடி (69,389 பக்தர்கள்) பிப்ரவரி 2: ₹3.77 கோடி (69,262 பக்தர்கள்)
தற்போது பக்தர்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, தர்ம தரிசனத்திற்கு (டோக்கன் இல்லாதவர்கள்) சுமார் 8 முதல் 12 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேசமயம் ₹300 சிறப்பு நுழைவுத் தரிசனம் மற்றும் நேரடி இலவச தரிசன டோக்கன் பெற்றவர்களுக்கு சுமார் 3 முதல் 4 மணி நேரத்திற்குள் தரிசனம் கிடைப்பதாகத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் குறிப்பிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என்பதால், தரிசனத்திற்குத் திட்டமிடும் பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!