இன்று சுசீந்திரம் தேரோட்டம்... குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை... 3 தேர்களில் சுவாமி வீதி உலா!
இன்று ஜனவரி 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் மார்கழித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற இருப்பதால், உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, வரும் ஜனவரி 10-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவசர காலப் பணிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரசு அலுவலகங்கள் வழக்கம்போலச் செயல்படும்.
தாணுமாலயன் கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே லிங்கமாக அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. தேரோட்டத்தின் போது சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர் என மூன்று தேர்கள் வீதி உலா வரும் காட்சியைக் காண குமரி மக்கள் மட்டுமன்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். புத்தாண்டு பிறந்த கையோடு, மாவட்டத் திருவிழாவிற்கு விடுமுறை கிடைத்துள்ளது குமரி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!