இன்று முழு சந்திர கிரகணம்... வானத்தில் ‘ரத்த நிலா’ BLOOD MOON
இன்று மார்ச் 14ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ இருக்கும் நிலையில் இன்று இரவு உலகம் முழுவதும் விஞ்ஞானிகளை பரவப்படுத்த காத்திருக்கிறது. இன்றைய சந்திரகிரகணத்தால் இரவு பொழுதில் வானத்தில் நிலா ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க தயாராகிறது.
இந்த அரிய நிகழ்வை Blood Moon என்று அழைக்கிறார்கள். இந்த ப்ளட் மூன் அமெரிக்காவில், ஆப்பிரிக்காவிலும் தெரிகிறது. நாளை இந்திய நேரப்படி மதியம் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.
2022 ஆண்டிற்குப் பிறகு தற்போது இந்த ரத்த நிலா தோன்ற இருக்கிறது. இந்த சந்திர கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. அதனால் நிலா ரத்த சிவப்பில் காட்சியளிக்கிறது.
கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நிலைநிறுத்தி, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும். வட மற்றும் தென் அமெரிக்காவில் இதனை சிறப்பாக பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!