ஒருதலை காதலால் விபரீதம்.. 17 வயது மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திய இன்ஜினியர்!

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் இன்ஜினியர் திருமாவளவன் (24). இவர் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் திருமாவளவன், கடலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலிப்பதாக கூறியும் சிறுமி, திருமாவளவனின் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கடலூர் முதுநகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 17 வயது சிறுமியை காரில் கடத்தியுள்ளார். அப்போது சிறுமி சத்தம் போட்டதால் அப்பகுதி மக்கள் இதனை பார்த்து விட்டனர். 

பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தந்தை, தனது மகள் கடத்தப்பட்டது குறித்து முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலூர் எஸ்பி அலுவலகம் அருகே சிறுமியை கடத்திக் கொண்டு செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்திய திருமாவளவன் உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து நான்கு பேரிடமும் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுமி சில நிமிடங்களிலேயே மீட்கப்பட்டார். சிறுமி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!