undefined

'ஜனநாயகன்' ரிலீஸில் மீண்டும் சிக்கல்... தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

 

விஜய்யின் கடைசிப் படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை ஏற்று நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு உடனடியாகத் தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் (CBFC) சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் மேல்முறையீடு செய்தது.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டது. தணிக்கை வாரியம் தனது தரப்பு நியாயங்களை விளக்குவதற்குத் தனி நீதிபதி போதிய அவகாசம் வழங்கவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சமூகத்தில் தேவையற்ற சலசலப்பை அல்லது பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகத் தணிக்கை வாரியம் முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இந்த வழக்கை விரைவாக மீண்டும் விசாரித்து புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு தனி நீதிபதி பி.டி.ஆஷாவுக்கே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!