ட்ரம்ப் வீட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை... பெரும் பரபரப்பு!
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மார் அ லாகோவின் இல்லத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கி மற்றும் எரிவாயு கேனுடன் அத்துமீறி நுழைந்தார். அந்த இல்லம் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடையது. பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் அவரை சரணடையுமாறு எச்சரித்தனர்.
எரிவாயு கேனை கீழே போட்ட அவர், துப்பாக்கியை உயர்த்தி அதிகாரிகள் மீது சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தங்களை தற்காத்துக் கொள்ளும் நோக்கில் அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஆஸ்டின் ட்ர்க் மார்ட்டின் என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்தபோது டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெர்லின் ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!