இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் அரசு வேலை...  சாதனை!

 

 கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அருகே உள்ள மணாலி பகுதியைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள், ஒரே நேரத்தில் அரசு வேலை பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். பாபு மற்றும் சிந்து தம்பதியினரின் மகள்களான அஞ்சனா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவருமே சிறுவயது முதலே ஒன்றாகப் பயின்று வந்தனர். தற்போது 30 வயதாகும் இந்தச் சகோதரிகள், விடாமுயற்சியுடன் அரசுப் தேர்வுகளுக்குத் தயாராகி வந்த நிலையில், இருவருக்குமே இப்போது அரசுப் பணி கிடைத்துள்ளது.

இதில் அஞ்சனா கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரி அர்ச்சனா திரூரில் உள்ள அரசு விற்பனை நிலையக் கிடங்கில் உதவி விற்பனையாளராகப் பணியாற்றப் பணி ஆணை பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரே வகுப்பில் படித்து வந்த இவர்கள், உயர்கல்வியில் வெவ்வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்தாலும், அரசு வேலை என்ற லட்சியத்திற்காக ஒன்றாகவே இணைந்து படித்து வெற்றி பெற்றுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் அரசுப் பணியில் இணைந்த செய்தி அந்தப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடாமுயற்சியும், தங்களுக்குள் இருந்த பரஸ்பர ஒத்துழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம் என இந்தச் சகோதரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வரும் இவர்களது சாதனை, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மற்ற இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!