‘ஜனநாயகன்’க்கு உடனே யு/ஏ சான்று வழங்க உத்தரவு!
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தில் உள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகளை காரணமாக்கி சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில், குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மறுஆய்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதி கடும் கேள்விகளை எழுப்பினார். ஒரே குழுவில் இருந்த உறுப்பினர் இப்படிப்பட்ட புகார் அளிப்பது வினோதமானது என்றும் கருத்து தெரிவித்தார்.
தீர்ப்பளித்த நீதிபதி, சென்சார் தலைவர் அதிகார வரம்பை மீறியுள்ளதாக கூறினார். ‘ஜனநாயகன்’ படத்திற்கு எதிரான புகார் ஆபத்தானது என்றும், இதுபோன்ற புகார்களை ஊக்குவிக்க முடியாது என்றும் தெரிவித்தார். மறுஆய்வு உத்தரவை ரத்து செய்த நீதிபதி, படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!