வீடியோ!! நடுரோட்டில் ரகளை கட்டிய இளம்பெண்!!

 

முன்பெல்லாம் ஆண்கள் மட்டும் தான் குடித்து விட்டு ரகளை கட்டுவது வழக்கமாக இருந்தது. தற்போது அதில் பெண்களும் சேர்ந்து விட்டனர். குடித்து விட்டு ரகளை, அட்டகாசம், நடுரோட்டில் அமர்க்களம் என தொடர் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. பொள்ளாச்சி, கோவை சாலையில் காந்தி சிலை அருகே திடீரென போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக  போக்குவரத்து காவலர்கள் விரைந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ஏன்? என பார்த்த போது, உச்சி வெயிலில் தார் சாலை நடுவே ஒரு பெண் கால்களை ஆட்டியபடி ஹாயாக படுத்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு போக்குவரத்து போலீசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.


ஓடிச் சென்று ஒற்றைக் கையில் பேருந்தை நிறுத்தியவர் என்னை மீறி செல்லும் அளவுக்கு துணிச்சல் உள்ளதா? என்ற தோரணையில் போக்குவரத்து போலீசாருக்கு “டப்” கொடுத்தார். அவ்வழியாக சென்ற யாரும் அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், போக்குவரத்தை தானே சீர் செய்வது போல் கற்பனைசெய்து கொண்டு அங்குமிங்கும் ஓடியபடி அட்டகாசம் செய்து கொண்டிருந்தார். மதுபோதையில் இளம்பெண் செய்த இந்த கோமாளித்தனங்களைப் பார்த்து கரிசனம் கொண்டு  காவல்துறை உதவி ஆய்வாளர் ஒரு வழியாகப் பெண்ணை பிடித்து சமாதானப்படுத்தி சாலையோரம் உட்கார வைத்தார். அந்த பெண் கணவரை இழந்த சோகத்தில் குடிபோதையில் இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது.  போதை தெளிந்த பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். போதை தலைக்கேற உச்சி வெயிலில் இளம் பெண் செய்த அட்டகாசத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!