undefined

  நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...  அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

 


 
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்தவர்  அஜித் குமார். இவர்  நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழகம் முழுவதும்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் குறித்து  அஜித் குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  5 காவலர்கள் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது