விஜய் - த்ரிஷா விவகாரம்.. சர்ச்சையைக் கிளப்பிய 'கட்சித் துண்டு' நபர்... கொதிக்கும் ரசிகர்கள்!
தவெக கட்சித் துண்டு அணிந்த நபர் ஒருவர், விஜய் மற்றும் த்ரிஷாவின் உறவு குறித்து மிகவும் கீழ்த்தரமாகவும், சர்ச்சைக்குரிய விதத்திலும் பேசியுள்ள வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் நபர், "எம்.ஜி.ஆர் எப்படி ஜெயலலிதாவை வைத்திருந்தாரோ, அதேபோல விஜய் த்ரிஷாவை வைத்திருக்கிறார்" என்று கூறுகிறார். கேள்வி கேட்டவர் த்ரிஷா கட்சியில் இல்லையே என மடக்க, "இப்போது பிரைவேட்டாக வைத்திருக்கிறார், பின்னாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்" என மிகவும் சர்ச்சைக்குரிய பதிலை அந்த நபர் அளிக்கிறார்.
இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், யாரோ ஒரு நபரைத் தவெக துண்டு அணிய வைத்துத் திட்டமிட்டுப் பேச வைத்துள்ளதாகத் தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நடிகை த்ரிஷா மற்றும் விஜய் ஆகிய இருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கத் தவெக வழக்கறிஞர் அணி தயாராகி வருவதாகத் தெரிகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!