கலக்கத்தில் தொண்டர்கள்... அமைச்சர் மா. சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி!
தமிழக அமைச்சரவையின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான மா. சுப்பிரமணியன், கடந்த இரண்டு நாட்களாகக் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குத் தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், காய்ச்சல் குறைந்தவுடன் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் மற்றும் மாரத்தான் ஓட்டங்களில் ஆர்வம் கொண்டவரான அமைச்சர் மா. சுப்பிரமணியன், விரைவில் குணமடைந்து மக்கள் பணியைத் தொடர வேண்டும் என்று பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!