பஹல்காம் தாக்குதலை நாங்கள் நடத்தல... கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர்.!
இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து லஷ்கர் இ தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி ஒரு வீடியோ அறிக்கையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் 22ம் தேதி பிற்பகல் 02:30 மணிக்கு 4-6 பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று கொண்டது. மேலும், காலித் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் சைஃபுல்லா கசூரி, லஷ்கர் இ தொய்பாவின் மூத்த தளபதி, இந்தப் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!