மார்ச் 20 வரை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வெதர்மேன் உறுதி!
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைத்து வந்தது. 'அக்னி நட்சத்திரம்' தொடங்குவதற்கு முன்பே வெப்பம் இவ்வளவு அதிகமாக இருக்கிறதே என்று மக்கள் கவலையடைந்த நிலையில், தற்போது இயற்கை ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாகத் தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியடையச் செய்து வருகிறது.
இந்த ஜெட் ஸ்ட்ரீம் மாற்றத்தின் காரணமாக, வரும் மார்ச் 20-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையமும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், கோடை வெயிலின் பிடியில் இருந்து மக்களுக்குச் சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. இந்தத் திடீர் மழையால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவவும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!