மணிப்பூரில் மீண்டும் கொடூரம்... இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்துக் கொலை ...!
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு அமைந்துள்ள மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி - ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் நவம்பர் 7ம் தேதி ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள், அங்குள்ள வீடுகளுக்கு தீவைத்தனர். அதே நேரத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 53 சதவீதம் மைதேயி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தான் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி, நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான முதற்கட்ட காரணமாகக் கூறப்படுகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின. இடம்பெயர்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரு சமூகத்தினர் சார்ந்த தீவிரவாதிகளும் ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிர்ச்சேதம் தொடர்கிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!