காசே தான் கடவுளடா... வாக்களித்த பின் பாமக நிறுவனர் ராமதாஸ்!

 

 தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் , பொதுமக்கள் என பாரபட்சமின்றி அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில்  பாமக நிறுவனர் தமது வாக்கினை பதிவு செய்து செய்தியாளர்களிடையே பேசியுள்ளார். அதில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.   தமிழகம்,  புதுச்சேரியில் உட்பட  40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார்.  


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில்  ஸ்ரீ மரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ்  தனது வாக்கினை பதிவு செய்தார்.  இதனையடுத்து  செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் , மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம் , புதுச்சேரி உட்பட  40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.  பாரத பிரதமராக மோடி 3வது முறையாக வெற்றி பெற வேண்டும்.  இந்திய நாட்டுக்கு இதுவே நன்மை பயக்கும்.  

அனைவரும் சமத்துவம் , சகோதரத்துவத்துடன் வாழ தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.   தமிழகம் முழுவதும்  இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பல இடங்களில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று சொல்லப்படுகிறதே  என்ற கேள்விக்கு, "காசே தான் கடவுளடா, அது கடவுளுக்கே தெரியுமடா. அது கடவுளுக்கே தெரியும்" எனக் கூறினார்.  தேர்தல் நியாயமாக நடக்கிறதா என்ற கேள்விக்கு  "எனக்கு வந்த தகவல் படி நியாயமாகவே நடக்கிறது. இன்னும் போகப் போக தெரியும்.. மாலையில் என்ன சந்திக்கும் போது நியாயமாக நடக்கிறதா என சொல்கிறேன் "  எனப் பூடகமாக பதில் கூறியுள்ளார்.  

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!