பிரபல பிக் பாஸ் போட்டியாளர் திடீர் கைது! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
வர்தூர் பிக்பாஸ்

பிரபல பிக்பாஸ் போட்டியாளர் வர்தூர் செல்வம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளது ரசிகர்கள் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கன்னட ரசிகர்களிடையே அதிகளவில் பிரபலமானவர் வர்தூர் செல்வம். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக அதிக பிரபலமடைந்தார். இந்நிலையில், வனத்துறையினர் அதிரடியாக வர்தூர் செல்வத்தைக் கைது செய்துள்ளனர்.

கைது

கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வர்தூர் செல்வம் கலந்து கொண்டதும், கன்னட ரசிகர்களிடையே அதிக பிரபலமடைந்தார். நம்மூர் பிக்பாஸ் ஜூலி போல அவரைச் சுற்றி சர்ச்சைகளும் கிளம்பியது. இந்நிலையில், வர்தூர் செல்வம், சமீபத்தில், கழுத்தில் புலி நகம் பதித்த லாக்கெட்டை அணிந்தவாறு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

புலி

இந்நிகழ்ச்சியைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள், வர்தூர் செல்வத்தின் மீது, சட்ட விரோதமாக புலி நகங்களை வைத்திருந்ததாக கூறி வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் வர்தூர் செல்வத்தை வனத்துறை அதிகாரிகள் இன்று வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web