பள்ளிகளுக்கு விடுமுறை... அதிகரிக்கும் காற்று மாசு... உலகின் மோசமான நகரமானது டெல்லி!

 
மூச்சு திணறும் தமிழகம்!! முக்கிய நகரங்களில் அதிகரித்த காற்று மாசு!!

தலைநகர் டெல்லி, காற்று மாசு காரணமாக உலகின் மிக மோசமான நகரமானது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று காற்று மாசு காரணமாக அரசு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை நீடித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. பட்டாசுகளால் தற்போதே காற்றில் மாசுபாடு அதிகரித்து வருவதாக சுற்றுச்சுழல் துறை தெரிவித்துள்ளது. அதிலும் தலைநகர் டெல்லியில் தினசரி வாகனங்களாலே காற்று மாசு என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு கட்டுப்பாடு , பட்டாசுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசுபாடு

 இருந்தாலும் கடந்த சில நாட்காளாக காற்றின் தரம் மிக குறைந்து காணப்படுகிறது.  காற்று மாசு அளவானது 350ஐ தாண்டி உள்ளதால், பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்வதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

காற்று மாசு

டெல்லி காற்று மாசுவை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், விடுமுறையை நீட்டித்து மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல , தற்போது அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து டெல்லியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web