புனே விபத்து.. சிறுவனின் தந்தைக்கு சொந்தமான ஹோட்டலை இடித்து தள்ளிய அதிகாரிகள்!

 
விஷால் அகர்வால்

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் மதுபோதையில் 18 வயது நிரம்பாத சிறுவன் அதிவேகமாக கார் ஓட்டிச்சென்று ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மகாராஷ்டிரா மாநிலம் புனே கல்யாணி நகரில் கடந்த மே 19ம் தேதி, அதிகாலை 'போர்ஷே' சொகுசு காரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் அதிவேகமாக ஓட்டி வந்து பைக்கில் சென்ற இருவர் மீது மோதினான்.

 புனே விபத்து

இந்த விபத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் ஒரு இளைஞரும், இளம்பெண்ணும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து விபத்து குறித்து கட்டுரை எழுதச் சொல்லி எளிதான தண்டனையுடன், விபத்தை ஏற்படுத்திய அடுத்த 15 மணி நேரத்தில் சிறார் குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கியது பொதுமக்களிடையே இது பெரும் அதிருப்தியையும், கண்டனங்களையும் குவித்தது.அதன் பின்னர், சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, சிறுவன் மீண்டும் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறுவன் மது அருந்தியிருந்ததை நிரூபிக்கும் பரிசோதனையை செய்யாமல், ரத்த மாதிரிகளை மாற்றி மோசடியில் ஈடுபட்ட மருத்துவர்களைப் போலீசார் கைது செய்தனர். 18 வயது நிரம்பாத சிறுவனக்கு பொறுப்பற்ற நிலையில் கார் வழங்கிய அவரது தந்தை விஷால் அகர்வால் கைது செய்யப்பட்டார். கார் டிரைவர், காரை ஓட்டிச் சென்றது நான் தான் என்று முன்வந்து குற்றத்தை ஒப்புக் கொள்ள முயற்சித்த போது அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுவனுக்குப் பதிலாக வேறு ஒருவர் கார் ஓட்டியதாக ஆள்மாறாட்ட மோசடிக்கு முயன்ற சிறுவனின் தாத்தாவையும் கைது செய்தனர்.

சிறுவன் மது அருந்த அனுமதித்த மதுபானக் கூட உரிமையாளர்கள் உள்ளிட்ட 3 பேர் அடுத்தடுத்து கைதாகினர்.இந்நிலையில் அரசு நடத்தும் சசூன் மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதனையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க மும்பை கிராண்ட்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் பல்லவி சபாலே தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை மகாராஷ்டிர மருத்துவக் கல்வி ஆணையம் நியமித்தது.இந்நிலையில் சிறுவனின் தாய் ஷாலினி அகர்வால், சிறுவனின் ரத்த மாதிரிக்கு பதிலாக தனது ரத்த மாதிரியை மாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்   ஷாலினி அகர்வாலையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவனின் தந்தைக்கு சொந்தமான ஹோட்டலை புல்டோசர்  வைத்து இடிக்கப்பட்டுள்ளது. சதாரா மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வாலுக்குச் சொந்தமான ஹோட்டல் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறி அதன் ஒரு பகுதியை அதிகாரிகள் புல்டோசர் மூலம் அகற்றினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web