அதிர்ச்சி... பைக் மீது மரக்கிளை விழுந்து கல்லூரி மாணவி மரணம்.. ஆண் நண்பர் கவலைக்கிடம்!
பைக்கில் கல்லூரி மாணவி, தனது ஆண் நண்பருடன் சென்றுக் கொண்டிருந்த போது, மரக்கிளை முறித்து மேல் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆண் நண்பர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி அன்னா மேரி (21). இவர் தனது நண்பரான கல்லூரி மாணவர் அதாப் அப்பேகர் (21) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இருவரும் எர்ணாகுளம் மாவட்டம் சம்பன்குட்டி கிராமம் அருகே நகரம்புரா வனப்பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வனப்பகுதியில் உள்ள மரக்கிளை முறிந்து, பைக்கில் சென்ற ஆனி மேரி, அடாப் அப்பேகர் மீது விழுந்தது. இதில் இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோதமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவி அன்னா மேரி உயிரிழந்தார்.

இதையடுத்து அதாப் அப்பேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
