மசூதிக்குள் நுழைந்து மதகுரு வெட்டிக் கொலை... அதிகாலையில் பயங்கரம்!
நேற்று அதிகாலை மசூதிக்குள் நுழைந்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மதகுருவை வெட்டிக் கொலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றது அஜ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார், தப்பி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் காஞ்சன் நகரில் உள்ள முகமதி மதீனா மசூதியின் மதகுரு முகமது மாஹிர் (30). உத்தரபிரதேசத்தின் ராம்பூரை சேர்ந்த இவருடன் மசூதியில் சில சிறுவர்களும் மசூதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மசூதிக்குள் முகமூடி அணிந்தபடி நுழைந்த 3 மர்ம நபர்கள், முகமது மாஹிரை கொலை செய்தனர். மசூதிக்குள் இருந்த 6 சிறுவர்களை, சத்தம் போடக்கூடாது என மிரட்டிய மர்ம நபர்கள், மாஹிரைக் கொலைச் செய்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினர். மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதும் சிறுவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரியவந்தது.தகவலறிந்த ராம்கஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் ரவீந்திர கிஞ்சி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, முகமது மாஹிரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மசூதி அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடந்து வருகின்றனர்
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!