அதிர்ச்சி வீடியோ.. சைக்கிளில் சென்றவரை அடித்து தூக்கி 2 கி.மீ வரை இழுத்து சென்ற கொடூரம்!
அரியானாவின் பன்னிவாலா மோட்டா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. வேகமாக வந்த பிக்-அப் வேன் சைக்கிளில் சென்றவர் மீது மோதியது. கீழே விழுந்தவரை இழுத்துச் சென்ற பிக்-அப் வேன் வேகமாக சென்றது. அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரி டிரைவர், பிக்கப் வேனை நிறுத்தச் சொல்லி ஹார்ன் அடித்தார்.
⚠️Use headphones ⚠️
— Lavely Bakshi (@lavelybakshi) April 27, 2024
देखिए पंजाब के पन्नीवाला मोटा से पिकअप गाड़ी के नीचे लाश को खींचता हुआ लाया 2 km तक #वायरलवीडियो pic.twitter.com/86FaAnGgTj
ஆனால் பிக்-அப் வேன் வாகனத்தை நிறுத்தாமல் சைக்கிளை இழுத்துச் சென்றது. இதை பார்த்த லாரி டிரைவர் பிக்கப் வேனை துரத்தினார். ஆனால் பிக்கப் வேன் டிரைவர் வேகத்தை குறைக்காமல் ஓட்ட ஆரம்பித்தார். ஆனால் லாரி டிரைவர் பிக்கப் வேனை துரத்தினார். இதையடுத்து, லாரி டிரைவரும், அதில் இருந்தவர்களும், பிக்கப் வேனை நிறுத்தினர். அப்போது அதன் அடியில் சிக்கியவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் பேசாமல் கிடந்ததால், ஆத்திரமடைந்த லாரி டிரைவர் பிக்கப் வேன் டிரைவர் மற்றும் அவரது பயணிகளை தாக்கினார்.
இந்த அதிர்ச்சி வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கிளில் வந்தவர் குர்னாம் சிங் என்பது தெரியவந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக குர்னாம் சிங்கின் உறவினர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிக்-அப் வேன் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!