உத்தரகாண்ட்: நிலச்சரிவில் 2 பேர் பலி; 7 பேர் மாயம்... மீட்பு பணிகள் தீவிரம்!

 
உத்தரகண்ட் நிலச்சரிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் பலியான நிலையில், 7 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரகாண்டில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரகாண்டின் யமுனோத்ரி நெடுஞ்சாலையில் சிலாய் பந்த் பகுதியில் ஹோட்டல் ஒன்றின் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் இந்த கட்டுமான பணிகளில் 19 முதல் 20 தொழிலாளர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். இதற்காக தொழிலாளர்கள் வேலைகள் முடிந்ததும் தங்குவதற்கு வசதியாக முகாம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

உத்தரகண்ட் சாமோலி

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முகாமில் தங்கியிருந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர்களில் 10 பேர் மீட்கப்பட்டு விட்டனர். 9 பேரை காணவில்லை. நெடுஞ்சாலையில் 10 முதல் 12 மீட்டர் நீளமுள்ள பகுதி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனை தொடர்ந்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் போலீசார் கூட்டாக இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு உத்தரகண்ட்

உத்தரகாண்டில் 24 மணிநேர சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு சர் தம் யாத்திரை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது