பகீர் வீடியோ: கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர்கள்... சமயோசிதமாக போராடி தப்பித்த தொழிலதிபர்!

 
உத்தரபிரதேச மாநிலம் மீரட்

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் முகமூடி அணிந்த 4 பேர், கையில் துப்பாக்கியுடன் திடீரென ஒரு பெரிய கடைக்குள் நுழைந்ததால், நிறுவனத்தின் அதிபர் துணுக்குற்றார். 

இருப்பினும், மர்ம நபர்கள் கடை முதலாளியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், விழிப்புடன் இருந்த தொழிலதிபர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடைக்குள் இருந்த மரச்சாமான்களை வீசினார், மேலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முகமூடி அணிந்த நான்கு நபர்களை நோக்கி மர சாமான்களை தூக்கி எறிந்தார். மீரட்டின் இன்சௌலி பகுதியில் அலுமினியம் சார்ந்த வியாபாரத்தை நடத்தும் ஜமீல் என்ற கடை உரிமையாளர் செய்த இந்த துணிச்சல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து அவரது துணிச்சல் குறித்து பேசுகின்றனர். 

துப்பாக்கியுடன் நுழைந்து தாக்கியவர்கள், இதன் பொருட்டு அவசரமாக கடையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள். இருப்பினும், அவர்கள் தொழிலதிபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது, சிசிடிவி வீடியோவில் பதிவாகி இருக்கிறது. 

ஆயுதம் ஏந்திய நான்கு பேர் கடைக்கு வெளியில் இருந்து தொழிலதிபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாலும், வியாபாரி கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சோபா மற்றும் இதர சாமான்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவரது உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்.

 



இறுதியாக, தொழிலதிபரை கொல்ல முயற்சி தோல்வியுற்றதால் கோபமடைந்த நான்கு தாக்குதல்காரர்களும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரவலாக பகிரப்பட்டது.

மீரட் காவல்துறை இந்த வீடியோவிற்கு பதிலளித்து, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கதில் பகிர்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இஞ்சௌலி காவல் நிலையப் பகுதியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர். குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  உள்ளூர் உடற்பயிற்சி கூடத்தில் கடைக்காரர் ஒரு குழுவுடன் சண்டையிட்டதை அடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு குழுவால் திட்டமிடப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். மோதலுக்குப் பிறகு கடைக்காரர் மீது தாக்குதல் நடத்த மறுபக்கம் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web