குட் நியூஸ்... ரயில்வே விதிமுறைகளில் முக்கிய மாற்றம்... இனி ரிசர்வ் செய்யும் போது மறக்காதீங்க!

 
ரயில் லோயர் பெர்த் முதியோர்

ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் யார்? மழை, யானை, ரயில் என பார்க்க பார்க்க அலுக்காத விஷயங்கள் இன்னமும் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிக் கொண்டு தானிருக்கின்றன. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு தோதான வாகனமாக பயணத்தை சுவாரஸ்யமாக்குவது ரயில்கள் தான். அதே சமயம், பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் சமயங்களில் பயணங்கள் நமக்கு அலுப்பைத் தருகின்றன. அதீத சத்தத்துடன் அலறிக் கொண்டிருக்கும் பக்கத்து இருக்கை இளைஞனின் செல்போன், அப்பர் பெர்த் என அந்த பட்டியல்களும் நீண்டு கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ரயில் பயணத்தை சுவரஸ்யமாக்குவதற்காக ரயில்வே துறை அவ்வப்போது தொடர்ந்து வசதிகளை  மேம்படுத்தி வருகின்றது. தினமும் லட்சக்கணக்கானோர் ரெயிலில் பயணம் செய்யும் சூழ்நிலையில், தங்களுக்குப் பிடித்த இருக்கையைப் பெற, ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யத் தொடங்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் விரும்பும் இருக்கை லோயர் பெர்த் அல்லது சைட் லோயர் பெர்த் என்பதாக இருக்கிறது. ஆனால் அவர்களால் அந்த இருக்கையை பதிவு செய்ய முடியாமல் போகலாம். இனி அப்படிப்பட்ட நிலை இல்லை. இதற்கான உத்தரவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. 

ரெயிலின் கீழ் பெர்த் சில வகை மக்களுக்கு இனி ஒதுக்கப்படும். ரயிலின் கீழ் இருக்கை யாருக்கு கிடைக்கும் என்பது தெரியுமா? மாற்றுத்திறனாளிகள் அல்லது உடல் ஊனமுற்றவர்களுக்காக இரயிலின் கீழ் பெர்த்தை ரயில்வே துறை ஒதுக்கியுள்ளது  அவர்களின் பயணத்தை மேலும் வசதியாக மாற்ற, இந்திய ரயில்வே இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

ரயில் கர்ப்பிணி லோயர் பெர்த் தாய்

ரயில்வே வாரியத்தின் உத்தரவின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நான்கு இருக்கைகள், 2 கீழ் 2 இருக்கைகள், மூன்றாவது ஏசியில் இரண்டு இருக்கைகள், ஏசி 3 எகானமியில் இரண்டு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கையில் அவரும் அல்லது அவருடன் பயணம் செய்பவர்களும் அமரலாம். அதே போல கரிப் ரத் ரயிலில் 2 கீழ் இருக்கைகளும், 2 மேல் இருக்கைகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அவர்கள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

ரயில்வே மூத்த குடிமக்களுக்கு, அதாவது 60 வயது நிரம்பிய பெரியவர்களுக்கு கேட்காமலேயே இனி லோயர் பெர்த்தை கிடைக்கும். ஸ்லீப்பர் வகுப்பில் 6 முதல் 7 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு மூன்றாவது ஏசி கோச்சில் 4 முதல் 5 கீழ் பெர்த்கள், ஒவ்வொரு இரண்டாவது ஏசி பெட்டியிலும் 3 முதல் 4 லோயர் பெர்த்கள் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு ரயிலில் ஒதுக்கப்பட்டுள்ளன.  அவர்கள் எந்த விருப்பத்தையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கையைப் பெறுகிறார்கள்.

ரயில்

ஒரு மூத்த குடிமகன்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்ணுக்கு மேல் இருக்கையில் டிக்கெட் முன்பதிவு கொடுக்கப்பட்டால், ஆன்போர்டு டிக்கெட் சோதனையின் போது டிக்கெட் பரிசோதகர் அவர்களுக்கு கீழ் இருக்கை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நான்கு நாட்களுக்கு முன்பே அதாவது 1ம் தேதி ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த வசதிகளைப் பெறுவதற்கு மறக்காமல், டிக்கெட் ரிசர்வ் செய்யும் போதே உண்மையான வயதை பூர்த்தி செய்ய வேண்டும். டிக்கெட் கவுண்டரில் உங்கள் தகவல்களைச் சொல்லி கேளுங்க. அதே சமயம், 35 பைசாவில் இருந்து 10 ரூபாய்க்கும் கீழாக தான் இன்சூரன்ஸ் இருக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே, இன்சூரன்ஸையும் சேர்த்து பதிவு செய்து விட்டால், ரூபாய் 10 லட்சம் வரையில் இன்சூரன்ஸ் கவரேஜ் உண்டு. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web