வாக்களிக்க வசதியாக இன்று முழுவதும் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

 
மெட்ரோ
இன்று ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்திலும் புதுவையிலும் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இன்று மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ

தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும், அசம்பாவிதங்கள் இன்றி நடத்தவும் 19000 துணை ராணுவப்படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இன்று தேர்தலில் வாக்களிக்க வசதியாக தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம், வாக்காளர்களின் வசதிக்காக இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட  உள்ளதாக தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்

அதன்படி காலை 8-11 மணி வரையும், மாலை 5-8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதே போல, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web