தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகிறது... இனி புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்!
Jun 6, 2024, 05:00 IST
![ரேஷன்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/b6c24d7b42ffa395602ff10777d9a087.jpeg)
தேர்தல் திருவிழா முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளையுடன் முடிவடைகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய உத்தரவுகள், சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் இந்த வாரம் முதல் தொடங்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஏற்கனவே நிலுவையில் உள்ள 2,24,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது சுமார் 2 கோடியை 24 லட்சத்து 19,359 ரேஷன் கார்டுகள் தற்போது நடைமுறையில் உள்ளன. இனி புதிய ரேஷன் கார்டுகள் பெற எளிதாக விண்ணப்பித்து உடனடியாக பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரடியாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From around the
web