சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 
ஸ்டாலின்


சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முன்னதாக இன்று காலை சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுப்பிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று முதல் வரும் ஜனவரி 7ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இன்று காலை சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில், “சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது என்று ஜான் மார்ஷல் கூறினார்.ஜான் மார்ஷலுக்கு சிலை அமைக்கும் பெருமை திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ளது.

ஸ்டாலின்

1948ம் ஆண்டிலேயே சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணா.செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரிகத்தை அடையாளப்படுத்தியவர் கருணாநிதி என தெரிவித்தார்.

சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும். கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருது வழங்கப்படும். தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web