நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டம் உடனடி அமல்... 10 ஆண்டுகள் சிறை, ரூ 1 கோடி அபராதம்!
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 5ம் தேதி நடத்தப்பட்டு ஜூன் மாத தொடக்கத்தில் முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார்கள் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை முற்றிலும் மறுத்தது. தேர்வு முடிவுகளை பொறுத்தவரை ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை உருவாக்கியது.

இது குறித்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு 23ம் தேதி மறுதேர்வு நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவு தேர்வுகளில் முறைகேடுகள் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டணை, அத்துடன் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தனிநபர் அல்லது குழுவுடன் சேர்ந்து தேர்வு நடத்தும் அதிகாரிகள், நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை செய்தால் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
