வாழ்த்த வரலை... வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன்” இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு 100வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

 
ஸ்டாலின்

 இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான இரா. நல்லகண்ணுவின் பிறந்த நாள் விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஸ்டாலின் நல்லகண்ணு

இந்த விழாவில் நேரில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பொதுவுடைமை அமைப்புக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது. நான் இங்கு வாழ்த்த வரவில்லை, வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன். 

அய்யா நல்லகண்ணு

எல்லாருக்கும் எல்லாம், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற உறுதுணையாக பக்கபலமாக இருப்பவர் நல்லகண்ணு.அமைதியாக, அடக்கமாக, ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தக் கூடியவர் நல்லகண்ணு. தொடர்ந்து, எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டி துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தமிழகத்தின் மதசார்பற்ற கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல நிரந்தரக் கூட்டணி. தற்போதைய சூழலில், 200 அல்ல அதற்கு மேலும் வெல்வோம்" எனத் தெரிவித்தார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web