1,035 சிறப்பு பேருந்துகள்... வார விடுமுறையில் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துக்கோங்க!
வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஜூலை 19, 20 தேதிகள் வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதால் இந்த நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் இடங்களுக்கு 705 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வார இறுதி நாட்களில் பயணிக்க 16000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
