10ம் வகுப்பு மாணவன் லாரி மோதி பலி... ரிசல்ட் பார்க்கும் முன்பே சோகம்!
![ஜீவா](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/dfd0b286d031dfd33df86aa56707980f.webp)
சென்னை மதுரவாயலில் ஏற்பட்ட சாலை விபத்தில் இன்று 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை தேர்வு முடிவு வெளியான நிலையில், ரிசல்ட்டை பார்க்கும் முன்பே 10ம் வகுப்பு மாணவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜீவா என்ற மாணவன் மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை மாணவன் ஜீவா மதுரவாயில் பாலத்தின் கீழே இரு சக்கர வாகனத்தில் வந்த போது, லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.லாரியை ஓட்டி வந்த டிரைவர், சாலையிலேயே வண்டியை நிறுத்தி விட்டு தலைமறைவான நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!