10ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு! எப்படி... எப்போது விண்ணப்பிப்பது?

 
தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர். இது பெற்றோர்கள் ஆசிரியக்ரளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான தினத்திலேயே பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல . மீண்டும் ஒரு முறை முயற்சிக்கலாம். உடனடியாக துணைத்தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். இதனால் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%.  தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்  முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 2ம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.  இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்  உடனடியாக தாங்கள் படித்த பள்ளிகள் அல்லது  தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு அட்டவணை

ஜூன் 27 – மொழிப்பாடம். 
ஜூன் 28 – ஆங்கிலம்
ஜூன் 30 – கணிதம்
ஜூலை 1 – விருப்பத்தேர்வு மொழிபாடம்
ஜூலை 3 – அறிவியல்
ஜூலை 4 – சமூக அறிவியல்

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு மே 24 முதல் 27ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 10ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.  தமிழ் பாடத்தில் எந்த மாணவரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. இந்த தேர்வில் மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும் 83.54% சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web