கார் , லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி!! முதல்வர் இரங்கல்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சோரம் பட்கான் கிராமத்தில் வசித்து வரும் குடும்பத்தினர் நேற்று இரவு திருமணத்திற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
अभी अभी सूचना मिली है कि बालोद के पुरूर और चारमा के बीच बालोदगहन के पास शादी कार्यक्रम में जा रही बोलेरो और ट्रक के बीच भिड़ंत में 10 लोगों की मृत्यु हो गई है एवं एक बच्ची की स्थिति गंभीर है।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) May 3, 2023
ईश्वर दुर्घटना में दिवंगत आत्माओं को शांति एवं उनके परिवारजनों को हिम्मत दे। घायल बच्ची…
இந்த சோக சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் "பலோட் மாவட்டம் புரூர் மற்றும் சார்மா இடையே திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்த போது காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், ஒரு சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு இறைவன் சாந்தியை கொடுக்கட்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு தைரியத்தையும் கொடுக்கட்டும். காயமடைந்த சிறுமி குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் " என பாகேல் தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் விபத்து ஏற்பட்டதும் தப்பி ஓடிய லாரி டிரைவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!