ஒரு பிரியாணிக்கு இன்னொன்று இலவசம்... குவிந்த பொதுமக்கள் சாலை முடங்கியது!

 
பிரியாணி

ஒரு பிரியாணி வாங்கினால், இன்னொரு பிரியாணி இலவசம் என்கிற அறிவிப்பால் குவிந்த பொதுமக்களால் சாலை முடங்கியது. புதிய பிரியாணி கடைகள் திறக்கும் போது, விளம்பர சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகை வழங்கப்பட்டதால், பிரியாணி வாங்க மக்கள் குவிந்தனர். புதுச்சேரி புஸ்ஸி சாலையில் மெட்ராஸ் வெட்டிங் பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது.

பிரியாணி

இந்த கடையின் திறப்பு விழாவில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று கடை திறக்கப்பட்டதும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரியாணி வாங்கினால் தள்ளுபடியாக மற்றொரு பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணி பிரியர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்கிச் சென்றனர்.

பிரியாணி

பிரியாணி வாங்க மக்கள் குவிந்ததால், அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு பிரியாணி வாங்கியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து பிரச்னையால் பிரியாணியை விரைந்து வாங்க போலீசார் அறிவுறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web