1½ கிலோ கஞ்சா பறிமுதல்... தூத்துக்குடியில் அதிகரிக்கும் போதைப் புழக்கம்!
கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் மூப்பன்பட்டி கண்மாய் அருகே நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, 3பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அதில், 2 பேரைப் பிடித்து சோதனை செய்த போது, அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், இவர்கள் கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்த சண்முகராஜ் மகன் விக்னேஷ் என்ற முருகேசன் (30), அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன் (25) என்பது தெரிய வந்தது. இந்த இருவர் மற்றும் தப்பியோடிய சாஸ்திரி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள் (30) ஆகியோர் மதுரையில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி, அதைச் சிறிய பொட்டலங்களாகப் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சிவபெருமாளை தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
