பகுதியாக ரத்து செய்யப்பட்ட 12 ரயில்கள் !! ரயில் பயணிகளே குறிச்சிக்கோங்க!!
விருதுநகர் மாவட்டம் கடம்பூர் யார்டு பகுதியில் சுரங்கப்பாதை ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரயில் சேவையில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜூன் 11 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மனி முதல் மாலை 5 மணி வரை சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதனால் 12 ரயில்கள் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூன் 12 - ஈரோடு - நெல்லை விரைவு ரயில் திண்டுக்கல் - நெல்லை இடையே பகுதியாக ரத்து
ஜூன் 13 - நெல்லை - ஈரோடு விரைவு ரயில் நெல்லை - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து
ஜூன் 13 -கோவை - நாகர்கோவில் விரைவு ரயில் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.
ஜூன் 13 - நாகர்கோவில் - கோவை விரைவு ரயில் நாகர்கோவில் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து
ஜூன் 13- பாலக்கோடு - திருச்செந்தூர் திண்டுக்கல் - திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து
ஜூன் 13- திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் திருச்செந்தூர் - திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து.
ஜூன் 13- திருச்சி - திருவனந்தபுரம் விரைவு ரயில் விருதுநகர் - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து
ஜூன் 13- திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் திருவனந்தபுரம் விருதுநகர் இடையே ரத்து
ஜூன் 12 மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில் விருதுநகர் - தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து
ஜூன் 13- தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் தூத்துக்குடி - விருதுநகர் இடையே பகுதியாக ரத்து
ஜூன் 12 -தாம்பரம் - நாகர்கோவில் \ விரைவு ரயில் திருச்சி - நாகர்கோவில் சந்திப்பு இடையே பகுதியாக ரத்து
ஜூன் 12ம் தேதி இதேபோல் ரயில் சேவை பாதையில் அதாவது குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் ரயில் நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியே எழும்பூர் செல்லும்.
ஜூன் 13- நாகர்கோவில் சந்திப்பு - மும்பை சி.எஸ். எம். டி ரயில் ஜூன் 13ல் நெல்லை, தென்காசி, விருதுநகர் வழியாக மும்பை செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!