குடையோடு கிளம்புங்க... 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!!

 
school rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை  பெய்து வருகிறது. இந்த மழை மேலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “இலங்கை மற்றும் அதன் கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது.  வங்கக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்ச நிலவுகின்றது.

rain

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி,திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

rain

 நவம்பர் 5ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளதுசென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web