நாளையும், மறுநாளும் 144 தடை உத்தரவு... மோடி பதவியேற்பு விழாவுக்கு உச்சகட்ட பாதுகாப்புடன் ஜனாதிபதி மாளிகை!

 
144
 இந்தியா முழுவதும்  ஏப்ரல் 19 முதல்  ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக  மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பிஜேபி  240 இடங்களை கைப்பற்றியுள்ளது.  பாஜகவுடன் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை பெற்று  ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் என்ற இலக்கை இந்த கூட்டணி கடந்தது.  இதை உறுதிசெய்யும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் மத்தியில் ஆட்சிஅமைக்க பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தன.  உடனடியாக மத்தியில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கிவிட்டது.  டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டம் நடைபெற்று இதில் ஒரு மனதாக பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டார்.  இதையடுத்து  ஆட்சி அமைக்க ஜனாதிபதியும் அழைப்பு விடுத்த நிலையில், நாளை பிரதமராக மோடி பதவியேற்க இருக்கிறார்.  மோடி பதவியேற்பு விழாவில் உலகம் முழுவதும் இருந்து 8000க்கும் மேற்பட்ட தலைவர்கள், விவிஐபிக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இதனையடுத்து டெல்லி உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் நாளையும், நாளை மறுநாளும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை  டெல்லி காவல்துறை பிறப்பித்துள்ளது.  மேலும் டெல்லியில் டிரோன்கள் மற்றும் பாரா கிளைடிங் போன்றவை பறக்கவும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web