லாரி மோதி பைக் ஓட்டிச் சென்ற 2 சிறுவர்கள் பலி! தந்தையின் பைக்கை ஓட்டி சென்ற போது கொடூரம்!

 
மது

சேலம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது சாந்தன் (14). அதேபோல், ராஜா என்பவரது மகன் நவீன் (14). நண்பர்களான சிறுவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். 

இதில் சிறுவன் நவீன் தனது தந்தை ராஜாவின் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றியுள்ளார். அப்போது, நண்பன் மது சாந்தனை அழைத்து கொண்டு இருவரும் அயோத்தியாபட்டணம் சென்று விட்டு மீண்டும் சுக்கம்பட்டி நோக்கி பைக்கில் திரும்பினர். அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி, பயங்கரமாக பைக் மீது மோதியது.

மது

இந்த கோர விபத்தில் லாரியில் சிக்கி மாணவன் மதுசாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சிறுவன் காயத்துடன் போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

மது

சாலை விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு பைக் ஓட்டக்கூடுத்தது பெற்றோர் தப்பு என்றும், அதேநேரம் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web