மக்களே உஷார்... 15 மாவட்டங்களுக்கு வெப்ப நிலைக்கான ஆரஞ்சு அலெர்ட்!

 
ஆரஞ்சு அலெர்ட்

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழக உள்மாவட்டங்களில்  வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் மே 9 ம் தேதி வரை  அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெப்ப அலை
இன்று முதல் மே 9ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 5 மற்றும் 6ம் தேதி  வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

வெப்ப அலை
இந்நிலையில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் என 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web