திருந்தவே மாட்டாங்க... தனியார் கிடங்கில் 1,500 லிட்டர் மெத்தனால் பறிமுதல்: 4 பேரை கைது!

 
மெத்தனால்
 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய மரணம் ஏற்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து தினந்தோறும் தமிழகத்தின் ஏதோவொரு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனைச் செய்து வருபவர்கள் என்று அடுத்தடுத்து கைது செய்யப்படுகின்றனர். எதிர்கட்சிகள் கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதுமே கள்ளச் சாராயம் விற்பனையைத் தடுப்பதற்காக மதுவிலக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மெத்தனால்


இந்நிலையில், சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் கள்ளத்தனமாக சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தகிடங்கின் ஓர் அறைக்கு பூட்டுபோடப்பட்டு இருந்தது. போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சுமார் 1,500 லிட்டர் மெத்தனால் ரசாயன கலவை கலன்களில் வைத்திருந்தது தெரிய வந்தது.

மெத்தனால்
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தடை செய்யப்பட்ட மெத்தனால் ரசாயன கலவையை பதுக்கி வைத்திருந்ததாக கவுதம், பரமசிவம்,ராம்குமார், பென்சிலால் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விநியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவருடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!