தமிழக மீனவர்கள் 16 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!
தமிழக மீனவர்கள் 16 பேரை எல்லை கடந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீண்டும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் 16 மீனவர்களுடன் 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக மீனவர்களைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் அட்டூழியத்திற்கு தமிழக அரசும், மத்திய அரசும் மெளனம் காத்து வருவது கடற்கரையோர மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று இலங்கை கடற்படையினர் இப்படி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மீனவர்களின் கைதை கண்டுக்கொள்ளாத அரசு மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!