சரக்கு வேன் கவிழ்ந்து 17 பள்ளி மாணவர்கள் படுகாயம் ... மருத்துவமனையில் அனுமதி!!
மதுரை கருங்காலங்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் 25 பேர் பேருந்தில் பள்ளிக்கு செல்வர். மாணவர்கள் படித்து வரும் நிலையில் நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் காத்திருந்தும், பேருந்து இல்லாததால் வழியே வந்த சரக்கு வேனை நிறுத்தி 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறி சென்றுள்ளனர்.
மதுரை - கருங்காலக்குடி அரசு பள்ளி மாணவர்கள் 17 பேர் நேற்று மாலை விபத்துக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 19, 2023
அவர்களுக்கு முதலமைச்சர் விபத்து நிவாரண நிதியிலிருந்து நிதி உதவிசெய்திட மாண்புமிகு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.@CMOTamilnadu @pmoorthy21 pic.twitter.com/uTcjsrmsV0
திருமேனிநாதன் வேனை ஓட்டி வந்த நிலையில் சிறிது தூரத்தில் வேன் கவிழ்ந்தது. இதில் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் , மதுரை - கருங்காலக்குடி அரசு பள்ளி மாணவர்கள் 17 பேர் நேற்று மாலை விபத்து ஏற்பட்டது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதல்வர் விபத்து நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி செய்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!