1,73,905 இடங்கள்... நாளை கடைசி தேதி... மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க!

 
பொறியியல் கல்லூரி

இந்த கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை மே 22ம் தேதி திங்கட்கிழமை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்திடுங்க. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதனால் மாணவர்களே மிஸ் பண்ணாம உங்க விண்ணப்பத்தை உடனே ரெடி பண்ணுங்க. 

கல்லூரி மாணவிகள்

இதற்கு முன்பாக தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 19 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் 1,73905 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு http://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தற்போது மே 22ம் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவிகள்

அதன் பின்னர், மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.மாற்றுத்திறனாளிகள் உட்பட  சிறப்புப் பிரிவினருக்கான மாணவர்  சேர்க்கை மற்றும் கல்லூரி அளவிலான கவுன்சிலிங் மே 25ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web