பேருந்து மீது லாரி மோதி 19 பேர் உடல் நசுங்கி பலி; 3 பேர் படுகாயம்!

 
விபத்து

பேருந்து மீது லாரி மோதி கோர விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். எகிப்து நாட்டின் மினொபியா மாகாணம் அர்ப் அல் சன்பாசா கிராமத்தில்  பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில்  22 தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.  

விபத்து

நேற்று காலை இந்த பேருந்து  அஷ்மொன்  பகுதியில் சென்ற போது சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். 

விபத்து

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது