அதிர்ச்சி... 20 நாட்கள் இடைவெளியில் 2 திருமணம்... அதிர வைத்த 19 வயது இளைஞன்!

 
பிரீத்தி

 20 நாட்கள் இடைவெளியில் பீகாரை சேர்ந்த 19 வயது இளைஞன் அடுத்தடுத்து இரண்டு பெண்களை திருமணம் செய்து அதிர வைத்திருக்கிறான். இது குறித்து தெரிந்ததும் முதல் மனைவி போலீசாரிடம் முறையிட்ட பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் தந்தி. இவரது மகன் வினோத் குமார் (19). இவருக்கு நவ்கடிஹ் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி குமாரியுடன் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரீத்திக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், பிரீத்தி குமாரியும் வினோத்தைக் காதலித்து வந்துள்ளார். தங்கள் காதலில் உறுதியாக இருந்த இருவருமே பிரீத்தியின் முந்தைய திருமணம் பற்றியோ அல்லது குடும்பத்தைப் பற்றியோ கவலைப்படவில்லை.

திருமணம்

இந்நிலையில் வினோத் குமார் பிரீத்தியை சந்திக்கத் திட்டமிட்டு, கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று பிரீத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது துரதிர்ஷ்டவசமாக கிராம மக்களிடம் வினோத்குமார்  பிடிபட்டார். இதையடுத்து அந்த கிராம மக்கள், இவர்களின் காதல் விவகாரம் தெரிந்து, அங்குள்ள கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் சென்று, இருவரும் காதலில் உறுதியாக இருந்த நிலையில், இருவருக்கும் உடனடியாக திருமணமும் செய்து வைத்துள்ளனர். அதன் பின்னர், பிரீத்தியை வினோத்குமார் தனது வீட்டிற்கு அழைத்து சென்று குடும்பம் நடத்தத் துவங்கினார்.
ஆனால் வினோத்குமாருக்கு ஏற்கெனவே வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பு இருப்பது பின் தெரியவந்துள்ளது. டிஜே-வாக பணிபுரியும் வினோத் குமார், கிரிஜா குமாரி என்ற பெண்ணின் பாடல் பரிந்துரைகளை அடிக்கடி ஒலிபரப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வினோத்குமாரிடம் மயங்கிய கிரிஜா குமாரி அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். 

திருமணம்
பிரீத்தி குமாரியுடன் திருமணமாகி, அவருடன் குடும்பம் நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் கிரிஜா குமாரியுடனும் வினோத்குமார் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கிரிஜாகுமாரி வீட்டிற்கு ரகசியமாக சென்ற வினோத்குமாரை, கிராமத்தினர் பிடித்து ஏற்கெனவே நடந்தது போல், கோயிலில் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். இந்த இரு திருமணங்களும் அடுத்தடுத்த 20 நாட்கள் இடைவெளிக்குள் நிகழ்ந்துள்ளது. 
தைரியமாக கிரிஜாவையும் வினோத் குமார் வீட்டிற்கு அழைத்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரீத்திகுமாரி, வினோத் குமாரின் தில்லாலங்கடி வேலைக் குறித்து மலாய்பூர் காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டார். இதையடுத்து அனைவரையும் போலீசார்  காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். அப்போது, பிரீத்திகுமாரியுடன் வினோத்குமார் சேர்ந்து வாழ, கிரிஜா குமாரி ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி மகேஷ் குமார் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப் பூர்வமான புகார் எதுவும் வரப்பெறவில்லை. புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்" என்றார். பீகாரில் 19 வயது இளைஞர் 20 நாட்களுக்குள் 2 திருமணம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web