பெற்றோர்களே உஷார்... தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நம்பேடு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேஷ்-ஐஸ்வர்யா. இவர்களுக்கு பிரேம் குமார், லோகேஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் 2 வயது சிறுவன் ராஜேஷ் கொத்தனாராக சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில், ஐஸ்வர்யா விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது தாய் வீடான தில்லனூரில் தாய் தந்தையை பார்ப்பதற்காக வந்துள்ளார். 2 மகன்களும் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இளைய மகன் லோகேஷ் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துவிட்டதாக தெரிகிறது.

லோகேஷின் அலறும் சத்தம் கேட்க ஓடிவந்த தாயார் ஐஸ்வர்யா உடனடியாக அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆரணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் லோகேஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
