200 சவரன் நகை கொள்ளை... பயங்கர ஆயுதங்களுடன் தம்பதியரை தாக்கி கொடூரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடுவனூரில் 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுவனூர் கிராமத்தில் கேசரி வர்மன் என்பவர் வீட்டில் நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கேசரி வர்மன் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தாய் பொன்னம்மாள், தந்தை முனியனை தாக்கி இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து முதிய தம்பதியை 2 கொள்ளையர்கள் தாக்கியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் இருந்த200 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!